Judy Dawson - Thuthi Ganam

துதி கனம் வல்லமை
கனத்திற்கு பாத்திரரும் தேவன் நீரே
துதி கனம் வல்லமை
கனத்திற்கு பாத்திரரே அல்லேலூயா

முழங்கால் யாவும் ஓர் நாள் முடங்கிடும்
நாவு யாவும் அறிக்கை செய்திடும்
கண்கள் யாவும் உம்மை காணும்
நீரே தேவன் என்று அறிவர்

குழந்தைகள் நாவில் துதி எழும்பும்
தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா
நாங்கள் உம்மை துதிக்காவிட்டால்
இந்த கல்லுகள் போற்றி துதிக்கும்

புல்லின் பூவை போல் உதிரும் எங்களை
இன்று தோன்றி மறையும் எம் வாழ்க்கையை
உந்தன் ஜீவனால், மீட்டு கொண்டீரே
வாழ்நாள் முழுவதும் உம்மையே துதிப்பேன்

Written by:
JUDY DAWSON

Publisher:
Lyrics © O/B/O DistroKid

Lyrics powered by Lyric Find

Judy Dawson

View Profile